நித்தியமான ஆயுள் காப்புறுதி

Views 58

பெரும்பாலான வேளைகளில் நாம் பல வகையான காப்புறுதித்திட்டங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவை என்ன என்று,
முக்கியமாக, அவை எதைப் பாதுகாக்கின்றன என்று, புரிந்துக்கொள்வது இல்லை. உண்மை என்னவெனில், இரு பிரதான வகை காப்புறுதிகள்உள்ளன. அவை, உங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு அம்சங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்

1) ஆயுள் காப்புறுதி

2) பொதுக் காப்புறுதி

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் பண நெருக்கடியைத்தீர்ப்பதில் ஆயுள் காப்புறுதி உதவும். நீங்கள் அகால மரணமடைந்தால்
காப்புறுதிப் பணம் உங்கள் குடும்பத்தினருக்குத் தரப்படும். மற்றபடி நீங்கள் நிரந்தர அல்லது தற்காலிக செயலிழப்புக்கு ஆளானால் பாலிசிப்
பணம் உங்களிடம் வழங்கப்படும்.

நான் ஏன் ஆயுள் காப்புறுதியை வாங்க வேண்டும்?

1) நீங்கள் மரணமடைந்த பின்னரும் உங்கள் குடும்பத்துக்கு வருமானம் கிடைக்க இது வகை செய்யும்.

2) உங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு இது உதவும்

3)பணி ஓய்வுக்குப் பின்னரும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைத்து வர இது நல்ல சேமிப்பு திட்டம்.

4)கடுமையான நோய் அல்லது விபத்து காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய வருமானக் குறைச்சலை நிவர்த்தி செய்யும்.
என்ன கிறிஸ்தவ தளத்தில் காப்புறுதி யை பற்றி விளம்பரம் உள்ளது என்று யோசிகின்றிர்களா? காப்புறுதி யை பற்றி நமது அன்றாட வாழ்வில் அறிந்திருப்போம்.ஆனால் நாம் அறியாத ஒருவர் நாம் கேட்காமலே நம்மீது வைத்த ஆழமான காதலினால் தனது சொந்த இரத்தம் என்றும் பாராமல் உனக்காக தந்து உயிரையும் கொடுத்து உனக்கு வரும் சகல ஆபத்துகளையும் தானே ஏற்று சுமந்து தீர்த்தார்
http://ac-sarujan.blogspot.com/search...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS