இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியை சுட்ட குண்டு எங்கே?- வீடியோ

Oneindia Tamil 2017-12-15

Views 4.4K

ராஜஸ்தானில் கொள்ளையனை பிடிக்கச் சென்ற போது மதுரவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீரமரணமடைந்தார். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் படுகாயமடைந்தார். இவர்கள் இருவரையும் சுட்டது யார் என்று சென்னை தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், விசாரணை நடத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள சென்னை அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் நேற்று இரவு ஆய்வு நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை நான் நேரில் பார்வையிட்டேன். பெரிய பாண்டியனை சுட்டது யார்? என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.

பெரிய பாண்டியின் உடலில் பாய்ந்த குண்டு வெளியேறி விட்டது. சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பார்த்ததில் அந்த குண்டு இன்னும் கிடைக்கவில்லை. அந்த குண்டு எங்கே என்று தேடி வருகிறோம். சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் நாதுராமும், அவரது நண்பர் தினேஷ் சவுத்ரியும் குற்றவாளிகள். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் நாதுராம் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார். தினேஷ்சவுத்ரி அதில் சம்பந்தப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து, அதிரடியாக ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள கடை ஒன்றில் திருட முயற்சித்தபோது தினேஷை மடக்கிப்பிடித்துள்ளனர். கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தினேஷ் சவுத்ரியை நாங்களும் கைது செய்து சென்னை அழைத்து வருவோம். விரைவில் நாதுராம் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.


Police personnel are highly worried over the killing of Inspector Periya Pandi and are raising many questions.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS