சகோதரி, தாயார் படுகாயங்களுடன் மீட்பு!- வீடியோ

Oneindia Tamil 2018-02-23

Views 6

அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல் என்பது தொடர்கதையாகிறது. நேற்றைய தினம் எட்டு வயது சிறுவன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளான், அவனது சகோதரியும், தாயாரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவனை இழந்த 45 பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வேலம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் 4 பேரும் வெளியூர்களில் வேலை செய்து தாய்க்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS