தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்று இயக்குநரும் நடிகருமான அமீர் கூறியுள்ளார். மண்வெட்டி, கலப்பையும் ஆயுதமே, அறிவு ஆயுதமாகவும் இருக்கலாம் என்றும் அமீர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காவிரி வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொழுதுபோக்கிற்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் போராட்ட நோக்கம் திசை திரும்பி விடும் என்பதால் இதனை ஒத்திவைக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ் திரை உலகினரும் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.
Director and actor Amir said that we should take up arms if necessary. a weapon of knowledge, Amir said.