சிவகங்கை அருகே பரவிவரும் விஷக்காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சிவகங்கை நகரில் 27 வார்டுகள் உள்ளது. இதில் ஒன்றாவது வார்டு முத்துசாமி நகரில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முத்துச்சாமி நகர் முதல் தெருவில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கிறது. அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் வெறியேறி வருகின்றன.