காமராஜர் ஆட்சி என்பதற்கும் தமிழக அரசு என்பதற்கும் என சொல்வது தான் அரசியல் ! கரு.பழனியப்பன் பேச்சு !

Asianet News Tamil 2025-07-26

Views 5

1963இல் காமராஜர் ஆட்சி காலத்தில் ஓட்டு கட்டிடம் இந்த அரசு பள்ளிக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. 1980 ஆண்டு நடுநிலைப் பள்ளியாக "தமிழக அரசால்" தரம் உயர்த்தபட்டது. 2010 ஆம் ஆண்டு நவீன வசதிகளுடன் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்ததப்பட்டு உள்ளது "தமிழக அரசால்". ஆனால் ஓட்டு கட்டிடம் காமராஜர் ஆட்சி காலத்தில் வந்தது. மற்றவை தமிழக அரசு என இருக்கிறது . அவ்வளவு தான் அரசியல். ஒன்று எல்லாவற்றையும் தமிழக அரசு என்று சொல்ல வேண்டும் இல்லை என்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா , கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சி காலங்கள் என்று சொல்லுங்கள். அதை விளங்கி விட்டால் நமக்கு வளர்ச்சி விளங்கிவிடும். எப்ப தேவையோ அப்போ பெயர் குறிப்பிடுவதும் எப்ப தேவை இல்லையோ அப்போது தமிழ்நாடு அரசு ஆக்கி விடுவது தான் பெரிய அரசியல். இது எதுவும் அவசியம் இல்லை, நாம் பிள்ளைகள் பிரமாதமாக படிக்க வேண்டியது. நன்கு படிக்க வைத்து பணம் சம்பாதிக்க வைத்து அந்த பிள்ளை இந்த பள்ளிக்கூடத்திற்கு வந்து கட்டிடம் கட்டுவது என்றால் அதைவிட மிகச் சிறந்த சந்தோஷம் வேறொன்றும் கிடையாது. அதற்கான துவக்கமாக இந்த நூற்றாண்டு விழா இருக்க வேண்டும்."என நத்தம் அருகே பள்ளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசினார். 
 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS