வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலாளிகள்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

ETVBHARAT 2025-10-19

Views 47

கோயம்புத்தூர்: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலாளிகள் இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த பாலாற்றின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இரண்டு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை முதல் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்ததால், கோயிலில் இரவு காவலர்களாக பணியாற்றி வந்த மகாலிங்கம் ஜெயக்குமார், ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.

இதுதொடர்பாக காவலர்கள் இருவரும் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் பேரில் விரைந்து வந்து தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் கயிறு கட்டி மீட்டனர்.

மேலும், இந்த கோயில் ஆற்றின் மையப் பகுதியில் இருப்பதால் இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS