தருமபுரி: தருமபுரியில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலைகளில் முன்பு செல்வோர் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு இருந்தது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முன் விளக்கை எரிய விட்டவாறு மெதுவாக கடந்து சென்றனர்.
இந்த பனிமூட்டம் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
தருமபுரி நகரப் பகுதியில் உள்ள எட்டிமரத்துப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நல்லம்பள்ளி தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8:30 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. சாலைகளில் 10 அடி இடைவெளியில் செல்லும் நபர்கள் கூட தெரியாத அளவு மூடுபனி நிலவியது குறிப்பிடத்தக்கது. கடும் பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளில் விளைச்சல் பாதிக்கப்படும் என அப் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.