தேனி: அதிமுகவில் மீண்டும் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் "இது பழைய செய்தி" என பதில் அளித்து விட்டு சென்றார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணிகள் குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசம்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுகவில் இணைவதற்கு நான் தயார் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தயாரா என தெரிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் மின் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிச்சாமி அதற்கு பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் உள்ள அவரின் வீட்டிலிருந்து போடிநாயக்கனூர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு இன்று புறப்பட்டு சென்ற போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மீண்டும் அதிமுகவில் பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது "இது பழைய செய்தி" என பதிலளித்தார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் அதற்கு பதில் கூறாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.