"கல்லைத் தூக்கு கருப்பட்டி தரேன்… கல்லைத் தூக்கு கருப்பட்டி தரேன்…" எனச் சொல்லிக்கொண்டே ஒரு கையில் சின்னக் கல்லையும், மறுகையில் தட்டானையும் பிடித்துக்கொண்டு, தட்டானை கல்லைத் தூக்கச்சொல்லியதும், தட்டானைப் பிடித்து அதன் வாலில் நூலைக் கட்டி பறக்கவிட்டதெல்லாம் ஒரு காலம். தட்டான் தாழப்பறந்தால் மழை வரும் என்பார்கள். இன்று மழையையும் காண முடியவில்லை. தட்டானையும் கண்டுபிடிக்க முடியவில்லை.!